மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் தீ; 5 பேர் உயிரிழப்பு

கோல்கத்தா: ஜகநாத்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த தீவிபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதனால் தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

ஏராளமானோர் மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் கருகிய நிலையில் ஐந்து பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்தது.

விபத்து நடந்தபோது ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!