பெங்களூரு: சனாதன தர்ம விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்று இருக்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். அது பற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சனாதன தர்ம விவகாரத்தில் எதிராளிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடி கூறி இருக்கிறார். அதன் அர்த்தம் என்ன? இதுபோன்ற அரசியலை நாங்கள் செய்யவில்லை. நான் அரசியலில் மதத்தை திணிக்க விரும்புவதில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க இருப்பது பற்றி அறிந்துள்ளேன். ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொள்வது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலை 28 கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள உள்ளது. நாடு முழுவதும் 60 விழுக்காடு வாக்குகளைப் பெற இந்தியா கூட்டணி இலக்கு நிர்ணயித்துள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.