திடீரென இடிந்த பாலம்; ஆற்றில் விழுந்த குப்பை லாரி

காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் வஸ்தாதி பகுதியில் உள்ள 40 ஆண்டு பழமையான பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

தினமும் ஏராளமான வாகனங்கள் பயணம் செய்ய உதவி வந்த அந்த பாலம் இடிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை பாலம் இரு துண்டாக உடைந்து ஆற்றில் விழுந்தது.

அப்போது அதில் சில வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன.

பாலம் உடைந்ததில் குப்பை லாரி ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் ஆற்றில் விழுந்தன.

சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.

படகு மூலம் நீருக்குள் விழுந்தவர்களை அவர்கள் மீட்டனர்.

விரைவாக செயல்பட்டதுடன் காவல்துறைக்கும் மீட்புப் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

பாலம் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 10 பேர் ஆற்றில் விழுந்ததாகவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!