ரூ.1¼ கோடிக்கு ஏலம் போன விநாயகர் லட்டு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின் கடைசி நாளில் விநாயகர் லட்டு ஏலம் விடப்படுவது வழக்கம். லட்டை ஏலம் எடுப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம், செல்வச் செழிப்பு கிட்டும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.

இந்தச் சூழலில், இவ்வாண்டு தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான பந்தலகுடாவில் உள்ள சன் சிட்டியில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு வியாழனன்று ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போனது.

கடந்த ஆண்டு லட்டு ரூ.65 லட்சத்துக்கு ஏலம்போன நிலையில், இந்த முறை இருமடங்காக ஏலம் எடுத்துள்ளனர். அதேபோல், ஹைதராபாத்தின் பாலப்பூர் நகரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.27 லட்சத்துக்கு ஏலம்போனது. தங்க லட்டு என்று அழைக்கப்படும் 21 கிலோ எடையுள்ள லட்டை தாசரி தயானந்த் ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!