மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கட்டுமானப் பணிக்கான பெரிய இரும்புச் சட்டம் சரிந்து விழுந்தது. அதையடுத்து பாலம் இடிந்து சரிந்தது.
நல்லவேளையாக அந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.