இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்கு நவம்பரில் சம்பள உயர்வு

மும்பை: இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ், நவம்பர் 1ஆம் தேதி முதல் அதன் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை வழங்கவுள்ளது.

அந்நிறுவனத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகாலம் பணியாற்றி வரும் ஊழியர்களையும் சிறப்பாகச் செயலாற்றியவர்களையும் இலக்காகக் கொண்டு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று இன்ஃபோசிசின் மனிதவளப் பிரிவுத் தலைவர் ஷாஜி மேத்யூ தெரிவித்தார்.

பொதுவாக ஜூன், ஜூலையில் சம்பள உயர்வை அறிவிக்கும் இன்ஃபோசிஸ், கடந்த இரு காலாண்டுகளாக அதைத் தள்ளிவைத்தது. நிறுவனத்தில் ஆக்கபூர்வமற்ற அம்சங்களை எதிர்கொள்ளவே சம்பள உயர்வு தள்ளிவைக்கப்பட்டதாக இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி நிரஞ்சன் ராய் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஆகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில் சம்பள உயர்வு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!