புதுடெல்லி: பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக் குழு (என்சிஇஆர்டி ) சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு, சிபிஎஸ்இ பாடநூல்களில் இந்தியா என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக “பாரத்” என்று மாற்ற பரிந்துரைத்துள்ளது.
‘என்சிஇஆர்டி’யின்கீழ் தயாரிக்கப்படும் அனைத்துப் பாடப்புத்தகங்களிலும் இனி பாரத் என்ற வார்த்தையே இடம்பெறும். மேலும், பாட நூல்களில் இந்து வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.