பெங்களூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 44 பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதையடுத்து அந்தப் பள்ளிகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் என அனைவரையும் வெளியேற்றிவிட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து அந்தப் பள்ளிகளுக்கு வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில் இதுபோன்று பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அப்போது நடந்த விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன், ஒரே நேரத்தில் பல மின்னஞ்சல்களை அனுப்பும் செயலி ஒன்றின் உதவியுடன் அந்த மிரட்டல்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோன்று இப்போது யாரோ ஏதோ ஒரு கைப்பேசிச் செயலி மூலம் இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!