புவனேசுவரம்: ஒடிசா மாநிலத்தின் சந்திரபாகா கடற்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக மணல் சிற்பக் கலை திருவிழாவின் 13வது நிகழ்வு ஒடிசாவின் புரியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திறமையான மணல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும், கலாசாரம் முதல் சமூகப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை பல்வேறு கருப்பொருள்களில் இந்த விழா நடைபெறுகிறது.