மிச்சாங் புயலால் ரயில் ரத்தாகி உ.பி.யில் சிக்கிய தமிழர்கள் 50 பேரும் வீடு திரும்பினர்

புதுடெல்லி: மிச்சாங் புயல் காரணமாக ரயில் ரத்து செய்யப்பட்டதால், விழுப்புரத்தைச் சேர்ந்த 50 பேர் வாரணாசியில் சிக்கினர். இவர்கள் அனைவரும் தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச அரசு அதிகாரிகளின் உதவியால் வீடு திரும்பினர்.

கடந்த நவம்பர் 24ல் விழுப்புரத்திலிருந்து சுமார் 50 பேர் வட மாநிலப் புனிதப் பயணம் கிளம்பினர். நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்களில் 26 பெண்களும், வயதானவர்களும் அடங்குவர்.

இவர்கள் நவம்பர் 26ல் வாரணாசிக்கு வந்த பின் அலகாபாத்துக்கும் சென்றனர். பிறகு பீகாரின் புத்தகயாவுக்கு பேருந்து மூலம் சென்றனர். புத்தகயாவிலிருந்து அனைவரும் டிசம்பர் 1ஆம் தேதி சென்னைக்குத் திரும்ப ரயிலில் முன்பதிவும் செய்திருந்தனர்.

சென்னையின் மிச்சாங் புயல் காரணமாக பெய்த மழையால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், இவர்கள் அனைவரும் புத்தகயாவில் சிக்கினர்.

இந்நிலையில், அவர்கள் செலவுக்காக வைத்திருந்த பணம் அனைத்தும் காலியாகிவிட்டது. மழையின் காரணமாக, தமிழகத்திலுள்ள தங்கள் குடும்பத்தாரின் உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக, தாம் வந்த பேருந்திலேயே வாரணாசிக்கு வந்து சேர்ந்தனர். இங்கு தங்களது கைப்பேசி மூலமாக தமிழக அரசின் வெளிநாடுவாழ் தமிழர்நலன் துறையினரைத் தொடர்பு கொண்டனர்.

இத்துறையின் மூலமாக உ.பி.யின் வாரணாசியிலுள்ள மாவட்ட ஆட்சியருக்கு விழுப்புரம்வாசிகள் சிக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாவட்ட ஆட்சியரான எஸ்.ராஜலிங்கம், திருநெல்வேலியின் கடையநல்லூரைச் சேர்ந்த தமிழர்.

ஆட்சியர் ராஜலிங்கம் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி வேண்டிய உதவிகளைச் செய்துள்ளார். பின்னர், இரண்டு நாள்களுக்குபின், டிசம்பர் 4ஆம் தேதி கிளம்பிய கங்கா காவேரி விரைவு ரயிலில் சிறப்பு முன்பதிவு செய்து இவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’இணையத்திடம் விழுப்புரம்வாசிகளின் ரயில் பயணத்தை ஏற்பாடு செய்த ஸ்ரீனிவாசன் கூறும்போது, “சென்னையில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் வட மாநிலத்திலிருந்த எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. உதவி கேட்டு தமிழக அரசுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் தகவலுக்கு நல்ல பலன் கிடைத்தது. அந்தத் துறையின் அமைச்சரான செஞ்சி மஸ்தானும் எங்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.

“வாரணாசி ஆட்சியர் எங்களை ஸ்ரீராமதரக்கா ஆந்திரா ஆஸ்ரமத்தில் சகல வசதிகளுடன் தங்க வைத்தார். அந்த இரண்டு நாள்களும் எங்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்டவை உ.பி அரசு சார்பில் அளிக்கப்பட்டது. டிசம்பர் 6ஆம் தேதி நாங்கள் பத்திரமாக எங்கள் வீடு வந்து சேர்ந்தோம்,” எனத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!