புதுடெல்லி: இந்தியாவில் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ளது. இதை மத்திய சுகாதார அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது. புதிதாக பரவி வரும் ஜேஎன்.1 திரிபு கிருமி குளிர்காலத்துக்குப் பிறகு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
குஜராத்தில் 36 பேரும், கர்நாடகாவில் 34 பேரும், கோவாவில் 14 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும், கேரளாவில் 6 பேரும், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா நான்கு பேரும் மற்றும் தெலுங்கானாவில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகாவில் இருவரும், குஜராத்தில் ஒருவரும் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.