மும்பை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தை ஜனவரி 1ஆம்தேதி காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.
இதில், 5 ஆண்டுகள் ஆயுள்காலத்தை கொண்ட ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 500 முதல் 700 கிலோ மீட்டர் வட்டமான பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ உள்ளிட்டவற்றையும் ஆராய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது.
இந்த விண்கலத்தில் கேரள கல்லூரி மாணவிகள் வடிவமைத்த ‘வெசாட்’ என்ற செயற்கைக்கோளும், வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்களும் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ கூறியது.
விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை மாணவர்கள், பொதுமக்கள் என 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.