எரிவாயுக் கலன் வெடிப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்திலுள்ள ககோரி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த எரிவாயுக் கலன் வெடித்தது. இவ்விபத்தில் ஐவர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

லக்னோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஷிர். இவர் தனது குடும்பத்துடன் ஹதா ஹஸ்ரத் சஹாப் வார்டு பகுதியில் வசித்து வந்தார்.

அப்பகுதியில் புதன்கிழமை வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தால் வீட்டிலிருந்த எரிவாயுக் கலன் திடீரென வெடித்தது. இதனால் வீட்டின் மேற்கூரையும் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. மேலும், எரிவாயுக் கலன் வெடித்ததால் வீடு முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையும் தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் முஷிர், அவரது மனைவி ஹுஸ்னா பானோ, மருமகள்கள் ஹினா, ஹுமா, சாயா ஆகிய ஐவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது. இதில் அஜ்மத், முஷிரின் மகள்கள் லகாப், இன்ஷா, அனம் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!