ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியத் தலைவரும் கூட்டாளியும் கைது

கௌகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்தியத் தலைவர் ஹரிஸ் ஃபருக்கியையும் அவருடைய கூட்டாளிகளில் ஒருவரையும் அசாம் மாநிலக் காவல்துறை புதன்கிழமையன்று (மார்ச் 20) கைது செய்தது.

அண்டை நாட்டில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தின் துப்ரி வழியாக இந்தியாவிற்குள் நுழையக்கூடும் என்று தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் இந்தியாவில் நாச வேலைகளை அரங்கேற்றத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

ரகசியத் தகவலை அடுத்து, ஃபருக்கியையும் அவருடைய கூட்டாளியையும் கண்டுபிடித்துக் கைதுசெய்ய, காவல்துறை சிறப்புக் குழுவை அமைத்தது.

அவர்கள் இருவரும் அனைத்துலக எல்லையைக் கடந்து, துப்ரியின் தர்மசாலா நிலையில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்த காவல்துறை அவர்கள் இருவரையும் கைதுசெய்து, கௌகாத்திக்கு அழைத்துச் சென்றது.

அவர்கள் இருவரும் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!