பரூக் அப்துல்லா: நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிடுகிறது.

தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் அகா ருகுல்லா வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

வியாழக்கிழமை கட்சித் தொண்டர்களிடையே பேசிய பரூக் அப்துல்லா, “முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் மோடி அண்மையில் ராஜஸ்தானில் பேசியது நாட்டையே உலுக்கி உள்ளது.

பிரதமர் என்பவர், நாட்டின் அரசியலமைப்பின் கீழ் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். பிரதமராக வருபவர் அனைவருக்கும் ஒரு தந்தை போன்றவர். அவரது கட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களின் நிறம், மதம், உணவு அல்லது உடையால் யாரையும் வேறுபடுத்தி பார்க்கக்கூடாது. ஆனால், பிரதமர் மோடி நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். அவரது பேச்சு ஏமாற்றம் அளிக்கிறது.

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைவரும் நாட்டின் குடிமக்கள். இந்த சமூகங்களிடையே வேற்றுமையை உருவாக்க முயற்சிப்பதை இந்தியா கூட்டணி எதிர்க்கிறது.

இந்தியாவின் அடையாளத்தையும், ஆபத்தை எதிர்கொண்டுள்ள இந்திய அரசியலமைப்பையும் பாதுகாக்கவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பை பாதுகாக்கும்,” என்று பேசியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!