கூட்டுப் பாலியல் வன்கொடுமை, இரட்டைக்கொலை வழக்கில் நால்வருக்குத் தூக்குத் தண்டனை

புதுடெல்லி: மாட்டிறைச்சி விற்றதாகக் குற்றஞ்சாட்டி விவசாயி ஒருவரது வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த கும்பல் ஒன்று, இரட்டைக்கொலைகளைச் செய்ததுடன் இரு பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமத் சௌஹான், அயன் சவுகான், வினய், ஜெய் பகவான் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதித்து ஹரியானா சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

அத்துடன், குற்றவாளிகளுக்குத் தலா ரூ.8.20 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

ஹரியானாவின் டிங்கர்கேரி கிராமத்தில் கடந்த 2016, ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு இந்தச் சம்பவம் நடந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் குற்றவாளிகள் என கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரிதிலும் அரிதான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு, நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இப்போது நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!