உத்தராகண்ட் காட்டுத் தீ: மூன்று நாள்களில் ஐவர் மரணம்

டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக கடந்த மூன்று நாள்களில் ஐவர் மாண்டுவிட்டனர். ஆகக் கடைசியாக 28 வயது பெண் ஒருவர் மரணமடைந்தார்.

ஆதி கைலாசத்தை ஹெலிகாப்டரில் சென்று பார்க்க பக்தர்களுக்காக வழங்கப்பட்ட சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ள புகைமூட்டம் காரணமாக நைனி-சைனி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆல்மோரா மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற துனாகிரி கோயிலுக்குச் செல்லும் பாதையை தீ சூழ்ந்துகொண்டதால் அக்கோயிலிலிருந்து பக்தர்கள் தப்பி ஓடினர்.

பக்தர்கள் பதற்றத்தில் அலறிக்கொண்டு தப்பி ஓடும் காட்சிகளைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

பக்தர்கள் தப்பிச் செல்ல வனத்துறை அதிகாரிகளும் கோயில் குருக்கள்மார்களும் உதவினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பலத்த காற்று காரணமாக காட்டுத் தீ மிக வேகமாகப் பரவி வருவதாக உத்தராகண்ட் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!