முறுக்கு தின்றபோது மூச்சுமுட்டி உயிரிழந்த குழந்தை

ஆலப்புழா: தொண்டையில் முறுக்கு சிக்கிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது.

இந்தத் துயரச் சம்பவம், இந்தியாவின் கேரள மாநிலம், மாவேலிக்கரையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது.

உயிரிழந்த வைஷ்ணவ், விஜீஷ் - திவ்யா தாஸ் இணையரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர்.

சம்பவம் நிகழ்ந்தபோது வைஷ்ணவ் தன் தாயுடன் இருந்தார். ஆயினும், வைஷ்ணவ் முறுக்கு தின்றபோது அவனுடைய தாய் அதனைக் கவனிக்கவில்லை எனக் கூறப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் வைஷ்ணவின் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை.

அவ்வேளையில், வேலை விஷயமாக விஜீஷ் பாலக்காடு சென்றிருந்தார். அவர் தச்சு வேலை செய்துவருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!