ஆலப்புழா: தொண்டையில் முறுக்கு சிக்கிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்தது.
இந்தத் துயரச் சம்பவம், இந்தியாவின் கேரள மாநிலம், மாவேலிக்கரையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 1) காலை 9.30 மணியளவில் நிகழ்ந்தது.
உயிரிழந்த வைஷ்ணவ், விஜீஷ் - திவ்யா தாஸ் இணையரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர்.
சம்பவம் நிகழ்ந்தபோது வைஷ்ணவ் தன் தாயுடன் இருந்தார். ஆயினும், வைஷ்ணவ் முறுக்கு தின்றபோது அவனுடைய தாய் அதனைக் கவனிக்கவில்லை எனக் கூறப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் வைஷ்ணவின் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை.
அவ்வேளையில், வேலை விஷயமாக விஜீஷ் பாலக்காடு சென்றிருந்தார். அவர் தச்சு வேலை செய்துவருகிறார்.