சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தி வரும் கதைக்களத்தில் இம்மாதம் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ‘குறுங்கதைகள் – ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (5.11.2023) பிற்பகல் 4 மணியிலிருந்து 6 மணிவரை தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்திலுள்ள இமேஜினேஷன் அறையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சிஹெச்ஐஜே செயிண்ட் தெரேசா கான்வெண்ட் பள்ளி மாணவர்கள் ‘மாணவர் கலந்துரையாடல்’ என்ற அங்கத்தைப் படைக்கவுள்ளனர்.
உள்ளூர்ப் படைப்பு குறித்த ‘நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்’ அங்கத்தில், எழுத்தாளர் ரமா சுரேஷின் ‘அம்பரம்’ நாவல் இடம்பெறுகிறது. திருவாட்டி பிரியா ஜெய்குமார் நூல் அறிமுகம் வழங்குகிறார்.
டிசம்பர் மாதக் கதைக்களத்தில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வி இராஜராஜனின் ‘காற்றலையில்’ சிறுகதைத் தொகுப்பு நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் இடம்பெறும்.
சிங்கப்பூர்த் தேசிய நூலகத்திலுள்ள நூல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நூலறிமுகம் எழுத வேண்டும். தேர்வுபெறும் 4 படைப்புகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி பிரிவு: 200 முதல் 300 சொற்கள்- தீபாவளிக் கொண்டாட்டத்தில் வீடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.
இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்கள் - நிறம் மங்கிய அந்தப் புகைப்படத்தை ஏன் என்னிடமிருந்து பிடுங்கினார் எனப் புரியவில்லை.
பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்கள் எழுத வேண்டும் - கேட்பாரற்றுக் கிடந்த கைப்பேசியில் அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 24.11.2023 வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/ பிரதீபா வீரபாண்டியன் – 8142 0220 / பிரேமா மகாலிங்கம் – 9169 6996