சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பை வழங்கும் அனைத்து அமைப்பு களும் பராமரிப்பு தொடர்பான விவரங்களை தேசிய மின்னியல் சுகாதார தகவல் பதிவேட்டிடம் பகிர்வதை சுகாதார அமைச்சு கட்டாயமாக்க விரும்புகிறது. அப்படிச் செய்தால் ஒவ்வொரு நோயாளியின் மருத்துவப் பின் னணி அம்சங்களும் மின்னியல் ஆவணங்களில் பிரதிபலிக்கும். தனியார் துறை மருத்துவரைச் சென்று பார்த்தது, நாள்பட்ட நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டது, ஒவ்வாமை, தடுப்பு மருந்து போன்ற அம்சங்கள் அதில் அடங்கும். கடந்த 2011ஆம் ஆண்டு தேசிய மின்னியல் சுகாதார தகவல் பதிவேடு தொடங்கப்பட் டது.
ஆறாண்டுகளில் தனியார் சுகாதாரப் பராமரிப்பினரிடம் விரைந்து செயல்படாத நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து மின் னியல் பதிவேடு திட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒட்டுமொத்த தக வல் தொகுப்பு முறையை ஏற்படுத்தி உள்ள உலகின் முதன்மை நாடு களில் சிங்கப்பூரும் ஒன்று. தேசிய மின்னியல் பதிவேட்டில் மருத்துவத் தகவல்களைப் பகிர் வதன் மூலம் தடையற்ற சிகிச்சை அளிக்க முடியும். அத்துடன் நோயாளிக்கு ஆகும் செலவையும் குறைக்க முடியும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற் றங்கள் அடுத்த ஆண்டு நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அவற்றுக்கு நாடாளுமன்றத்தின் இசைவு கிடைத்ததும் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள் தேவை யான ஆயத்தப் பணிகளில் ஈடுபட இரண்டு முதல் மூன்றாண்டு வரையில் அவகாசம் வழங்கப்படும்.