முதலீட்டு மோசடியிலிருந்து முதியவரைக் காப்பாற்றிய வங்கி, காவல்துறை

முதலீட்டு மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட $1.5 மில்லியன் இழக்கவிருந்தவர் காவல்துறையும் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் ஜனவரி 11ஆம் தேதி நடந்தது.

அந்த 71 வயதான முதியவரிடம் வெளிநாட்டு முதலீட்டாளர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார் ஒரு மோசடிப் பேர்வழி.

போலியான முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகம் செய்துவைத்த அவர், அவற்றில் முதலீடு செய்தால் விரைவாக வருமானம் பெறலாம் என அம்முதியவரிடம் உறுதியளித்தார். இதனையடுத்து, அம்முதியவர் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பெரிய தொகைகளை அனுப்பியதாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஜனவரி 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அம்முதியவர் அந்த வங்கிக் கணக்குகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பினார் என்ற விவரங்களைக் காவல்துறை தெரிவிக்கவில்லை.

காவல்துறையின்மோசடி தடுப்பு நிலையமும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியும் இந்தப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்தன.

அந்தப் பரிவர்த்தனைகள் மூலம் மோசடிப் பேர்வழிக்குப் பணம் கைமாறியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்த மோசடி குறித்து காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையம், அம்முதியவருக்குக் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி எச்சரித்தது. அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட வங்கியின் மோசடித் தடுப்புக் குழு, அவருடைய மின்னிலக்க வங்கிச் சேவையைத் தற்காலிகமாக முடக்கியது.

இதன்மூலம், அம்முதியவருக்குக் கிட்டத்தட்ட $1.5 மில்லியன் இழப்பு ஏற்படாமல் தடுத்து, வங்கியும் மோசடித் தடுப்பு நிலையமும் உதவியதாக காவல்துறை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!