சிங்கப்பூரில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஊழியரணியில் குறைந்தது 30 விழுக்காட்டு வெளிநாட்டினரைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களின் விகிதம் கடந்த பத்தாண்டில் மாற்றமின்றி நிலையாக 20 விழுக்காட்டிலேயே இருந்துள்ளது.
25க்கும் குறைவான நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களைப் பணியில் அமர்த்திய சிறிய நிறுவனங்களின் 2023ஆம் ஆண்டின் விகிதம் அதிகமாக இருந்ததாக மே 7ஆம் தேதி மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.
இருப்பினும், கடந்த பத்தாண்டில் ஏறக்குறைய 20 விழுக்காட்டுச் சிறிய நிறுவனங்களுக்கு 30 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமான பிஎம்இடி வெளிநாட்டு ஊழியர்கள் இருந்ததாக தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்தபோது டாக்டர் டான் கூறினார்.