மோட்டார்சைக்கிளோட்டி மீது சிற்றுந்து மோதி மரணம் விளைவித்தவருக்கு நான்கு மாதச் சிறை

தீவு விரைவுச்சாலையில் சிற்றுந்தைக் கவனக்குறைவாக ஓட்டி மோட்டர்சைக்கிளோட்டிமீது மோதிய ஓட்டுநருக்கு வியாழக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

உயிரிழந்த 57 வயதான மோட்டர்சைக்கிளோட்டியின் பெயர் சத்யதேவ் ராமானுஜ்.

தன்மீது சுமத்தப்பட்ட கவனமில்லாமல் வாகனமோட்டிய குற்றச்சாட்டை 41 வயது முகமது ஹைருல்சாத் சாலே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, எட்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ ஹைருல்சாத்துக்குத் தகுதியில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தக் குற்றத்தை ஹைருல்சாத் 2021ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி புரிந்ததாகவும் அப்போது அவர் ‘அரோரா வெர்ல்டு’ எனும் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்ததாகவும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!