பண மோசடிச் சம்பவங்கள்: 227 பேரிடம் விசாரணை

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக நடந்த மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் 227 பேரை விசாரித்து வருகின்றனர்.

அந்த மோசடிகளில் மொத்தம் $8 மில்லியனுக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன.

பதினைந்து முதல் எழுபது வயது வரையிலான 158 ஆண்களும் 69 பெண்களும் 1,000க்கும் அதிகமான சம்பவங்களில் ஈடுபட்ட மோசடிக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இணையக் காதல் மோசடிகள், வேலை மோசடிகள், மின்வர்த்தக மோசடிகள், முதலீட்டு மோசடிகள், அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள் முதலியவை அவற்றில் அடங்கும்.

பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 15 வரை, தீவு முழுதும் இரண்டு வாரங்கள் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் அந்தச் சந்தேகப் பேர்வழிகள், ஏமாற்றுச் செயல்கள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய செயல்கள், உரிமமற்ற கட்டணச் சேவைகளை வழங்கியது போன்றவற்றுக்காக விசாரிக்கப்படுகின்றனர்.

ஏமாற்றுக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள்வரை சிறைத்தண்டனையோ அபராதமோ விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், பத்தாண்டுகள்வரை சிறைத்தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!