இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் தொடர்பில், உத்தேசக் குற்றங்களுக்காக சிங்கப்பூரில் இரண்டு நிகழ்ச்சிகளை காவல்துறை விசாரித்து வருகிறது.
அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்றன.
பிற்பகல் 2 மணிவாக்கில், 70 பேர் கொண்ட குழு ஆர்ச்சர்ட் சாலையில் கூடி, இஸ்தானாவை நோக்கிச் சென்றதாக காவல்துறை கூறியது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தர்ப்பூசணிப் பழத்தின் படங்களைக் கொண்ட குடைகளை அவர்கள் ஏந்திச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றொன்று, பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 7.30 மணிவாக்கில் நடைபெற்ற தனிபட்ட நிகழ்வாகும்.
அந்த நிகழ்ச்சி குறித்த காணொளி இணையத்தில் பரவியது பற்றிய புகார்கள் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. அந்தக் காணொளியில் நபர் ஒருவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான வாசகங்களை முழக்கமிட்டுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் பூசலினால் பதற்றநிலை அதிகரித்துவரும் சூழலில், அது குறித்த பொதுக் கூட்டங்களின் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த அக்கறைகள் இருப்பதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.