சிறுவர்களை மானபங்கம் செய்ததாக ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

2014க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலங்களில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவனை மானபங்கம் செய்ததாகத் தனியார் ஆசிரியர் ஒருவர்மீது செவ்வாய்க்கிழமை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த 57 வயது ஆசிரியரின் பெயர் சௌ கும் சோய்.

நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டு மே மாதம் பாதிக்கப்பட்ட அந்த மாணவன் அளித்த வாக்குமூலத்தில், தான் அக்காலக்கட்டத்தில் 10 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டிருந்ததாகவும் தான் மானபங்கம் செய்யப்படுவதை அறியவில்லை எனவும் தெரிவித்தான்.

சக நண்பர்களுடன் பேசிய பிறகு தான் தெரிந்தது சோய் மற்றவர்களுடனும் தவறாக நடந்துகொண்டார் எனக் கூறினான். பின்னர் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளும் நிரூபமாயிண.

அவர்மீது மற்றோர் சிறுவனை மானபங்கம் செய்ததற்காகவும் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது எனச் சொல்லப்பட்டது.

வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!