பதின்ம வயது பெண்ணுக்குச் சீர்திருத்தப் பயிற்சி

சிங்கப்பூரில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 வயது பெண் ஒருவர் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்தப் பெண் $950க்குக் கைம்மாற்றாக 34 வயது ஆடவர் ஒருவருடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதோடு, அவரிடமிருந்து கூடுதல் பணத்தைப் பெறுவதற்கு, அந்தப் பெண் மற்றொரு பதின்ம வயது பெண்ணுடன் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பதின்ம வயதுப் பெண்ணுக்குச் சென்ற ஆண்டு ஏப்ரலில் 18 வயது பூர்த்தியானது. நீதிமன்ற ஆவணங்களில் ‘ஏஐ’ என்று குறிப்பிடப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு இப்போது வயது 17.

சென்ற ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்த ஆடவர் வயதுகுறைவான அந்தப் பெண்ணிடம் சட்டவிரோதமாக பாலியல் சேவைகளை நாடியதால், அவர் தங்களுக்குப் பணம் செலுத்தாவிட்டால் காவல்துறையில் புகார் செய்யப்போவதாக அந்த இரு பெண்களும் மிரட்டினர்.

அதனால், அந்த ஆடவர் மூத்த பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு $50,000 அனுப்பினார்.

ஏமாற்றியதற்காக ஒரு குற்றச்சாட்டையும், மிரட்டிப் பணம் பறித்ததற்காக ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்ட பின்னர் 18 வயது பெண் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அந்த ஆடவர் மீதான வழக்கும், மற்றொரு பெண் மீதான வழக்கும் தொடர்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!