ரிடவுட் வீடுகள் குறித்த பதிவு: மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக இழப்பீடு கோரும் சண்முகம், விவியன்

ரிடவுட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பில் ஃபேஸ்புக் தளத்தில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதை அடுத்து, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதற்காக அமைச்சர்கள் கா.சண்முகம், விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் திரு லீ சியன் யாங்கிடமிருந்து இழப்பீடு கோருகின்றனர்.

தங்களுக்குரிய இழப்பீட்டை மதிப்பிடுவதற்கான விசாரணைக்காக உயர் நீதிமன்றத்திற்கு இரு அமைச்சர்களும் மே 2ஆம் தேதி வந்திருந்தனர்.

அமைச்சர்கள் இருவரும் தாங்கள் சமர்ப்பித்த ஆணைப் பத்திரங்களின் உள்ளடக்கத்தை உறுதிப்படுத்த, சிறிது நேரம் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தனர்.

திரு லீ சியன் யாங் நீதிமன்றம் வரவில்லை.

நீதிமன்ற விசாரணை சுமார் 20 நிமிடங்களில் நிறைவுபெற்றது.

அதையடுத்து, தாங்கள் கோரும் இழப்பீடு குறித்து திரு சண்முகமும் திரு விவியனும் தொகை ஏதும் குறிப்பிடவில்லை என்றும் அதை நீதிமன்றத்திடமே விட்டுவிடுகின்றனர் என்றும் இரு அமைச்சர்களின் சார்பாக வழக்காடும் மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமது அவதூறு பதிவால் ஏற்பட்ட விளைவுகளை திரு லீ சியன் யாங்கின் நடத்தை மேலும் மோசமாக்கியுள்ளதாக திரு சிங் வாதிட்டார்.

சட்டரீதியாக உத்தரவு இடப்பட்டும் திரு லீ சியன் யாங் தமது பதிவுக்காக மன்னிப்பு கேட்கத் தவறிவிட்டதாக அவர் கூறினார். அதற்குப் பதிலாக, இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக பொது இயக்கம் ஒன்றை அவர் தொடங்கி சிங்கப்பூரர்களிடமிருந்து அனுதாபத்தையும் ஆதரவையும் பெற முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவதூறுப் பதிவு தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் விதமாகப் பல ஃபேஸ்புக் பதிவுகளை திரு லீ சியன் யாங் பதிவிட்டும் தாம் கூறியது உண்மை என்று அவர் ‘ஒருபோதும் கூறவில்லை’ என்று வழக்கறிஞர் சுட்டினார்.

“இது குறிப்பிடத்தக்க ஒன்று. தான் கூறியது உண்மை என்று சொல்ல நீதிமன்றத்திற்கு அவர் வரவில்லை. அவரது புண்படுத்தும் சொற்கள் பொய் என்று அவர் அறிந்திருக்கிறார்,” என்றார்.

விசாரணை முடிந்து நீதிமன்றத்தை விட்டுச் செல்லும் அமைச்சர் கா.சண்முகம் (பின்னிருக்கை). படம்: சாவ் பாவ்
நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். படம்: சாவ் பாவ்

உள்துறை, சட்ட அமைச்சரான திரு சண்முகம், வெளியுறவு அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இருவரும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரு லீ சியன் யாங்குக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே அவதூறு வழக்குகளைத் தொடுத்திருந்தனர்.

அதே ஆண்டு ஜூலை மாதம் திரு லீ சியன் யாங்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு தொடர்பாக இந்தச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!