மெர்லயன் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தை அடுத்து கடந்த மார்ச் மாதம் 22 வயதுக்குக் கீழ் உள்ள வீரர்கள் அடங்கிய சிங்கப்பூர் காற்பந்துக் குழு, கடைசி நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளர் ஃபிலிப்பே ஆவ் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுப்பது சந்தேகம்தான் என்பதுபோல் பேசினார்.
அவர் அப்போது கூறியதை அப்படியே நம்பலாமா என்றிருந்த காற்பந்து ரசிகர்கள், எப்ரல் 30 அன்று சிங்கப்பூர் அணி தாய்லாந்திடம் 3-1 என்ற கோல் கணக்கில், தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியின் ‘பி’ பிரிவு முதல் ஆட்டத்தில், தோற்றபின் அவர் கூறியதன் உண்மைப் பொருளைப் புரிந்துகொண்டிருப்பர்.
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி தோற்றிருப்பது இது நான்காவது முறையாகும்.
தாய்லாந்து அணி கிடைத்த பல வாய்ப்புகளை வீணடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிக கோல் எண்ணிக்கையில் சிங்கப்பூர் அணி தோற்றிருக்கக்கூடும் என்று செய்தித் தகவல்கள் கூறுகின்றன.