நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

சிங்கப்பூர் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் இணைந்து திங்கட்கிழமை பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தின.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்தப் பயிற்சி நடந்தது.

இந்த ஒத்திகை மில்லெனியா சிங்கப்பூர் ஒருங்கிணைந்த வளாகத்தில் நடந்தது. ‘ஹார்ட்பீட்’ எனப் பெயரிடப்பட்ட இந்த ஒத்திகையில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் காவல்துறையைச் சேர்ந்த அவசரகால நடவடிக்கைக் குழு உட்பட பல பிரிவைச் சேர்ந்த அவசரகால உதவி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஒத்திகையைப் பார்வையிட்ட உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், “உலகளாவிய மோதல்களும் போர்களும் நிறைந்த நிச்சயமற்ற காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று,” எனக் கூறினார்.

கொவிட் -19 கொள்ளைநோய் காலத்திற்குப் பிறகு நடைபெறும் முழு அளவிலான பயங்கரவாத பயிற்சி இதுவாகும். கடந்த ஆண்டு சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சிறிய அளவிலான ஒத்திகை மற்ற அவசரகால குழுக்களின் பங்களிப்பின்றி நடந்தது.

தன்னார்வளர்களும் அதிகாரிகளும் பயங்கரவாத எதிர்ப்புக் காட்சிகளைத் தத்ரூபமாக நடத்திக் காட்டினர் என காவல்துறை கூறியது.

இந்தப் பயிற்சியில் தற்கொலைப் படைத் தாக்குதல், பொதுமக்கள்மீது வாகனத் தாக்குதல், பொதுமக்களைப் பிணைப் பிடிப்பது போன்றவை இடம்பெற்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!