ஆர்ச்சர்ட் சென்ட்ரல் : ஆறு பேரை காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டு

ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் ஜனவரி 1 ஆம் தேதி இரண்டு ஆடவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து பாரத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.

ஏடம் ஹம்பலி செட்டொன்,30, 18 வயதான கார்மெலோ ஜோஷ்வா எமிலியோ எஸ்மோன்ட்  டி’சில்வவை தாக்கியபோது, நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் தாக்குதலை தடுக்க முயன்ற தருணத்தில் அவர்களும் தாக்கப்பட்டனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மரணம் விளைவிக்கும் ஆயுதம் ஒன்றை வைத்து காயங்கள் ஏற்படுத்தியதாக, ஏடம் ஹம்பலி செட்டொன் ஜனவரி 4 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார். தாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து மேலதிக தகவல்களைக்  காவல்துறை வழங்கவில்லை.  

பாதிக்கப்பட்டவர்கள் 18 வயது முதல் 30 வயதுகுட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்கள். 

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் கத்திக் காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, வணிக வளாகத்தின் 11 வது மாடியில் 200 மீட்டர் நீளத்தில் பல்வேறு இடங்களில் இரத்தக் கறைகள் காணப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!