மூத்தோருக்குப் பழைய கம்பத்து நினைவுகளைக் கொண்டுவரும் கலைத் திட்டம் ஒன்றை தேசிய மரபுடைமைக் கழகம் நேற்று தொடங்கியது. உள்ளூர் ஓவியர் யிப் யூ சோங்கின் இரு படைப்புகள் மீண்டும் வரையப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்த ஓவியங்கள் கம்பத்தை பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் காட்டுகின்றன.
திட்டத்தில் பங்கெடுக்கும் 12 மூத்தோர் பராமரிப்பு நிலையங்களில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படும். ஒவ்வொரு நிலையத்திலும் ஓவியங்கள் இரண்டு வாரங்களுக்குக் காட்சிக்கு வைக்கப்படும்.
திட்டத்தில் ஏறத்தாழ 90 பேர் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்
நான்கிலிருந்து எட்டு மூத்த குடிமக்கள் பங்கெடுப்பர். இவை ஸூம் செயலி மூலம் நடத்தப்படும். திட்டத்தில் பங்கெடுப்போரிடம் கலைப்பொருட்கள் அறிமுகப்
படுத்தி வைக்கப்படும். அது
மட்டுமல்லாது, கம்பத்தில் வாழ்ந்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நினைவுகள் ஆகியவற்றப் பகிர்ந்துகொள்ள மூத்த குடிமக்கள் ஊக்குவிக்கப்படுவர்.