ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை சேர்ந்த ஜோசஃப் ஸ்கூலிங்கின் முன்னாள் பேச்சாளரான முஹமட் ஹஃபிட்ஸ் ஜாஃபருக்கு 38, நண்பர்களை ஏமாற்றி மோசடி செய்ததற்காக 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஸ்கூலிங் நீச்சல் பள்ளியின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்த முஹமட் ஹஃபிட்ஸ், தன் மீது சுமத்தப்பட்ட எட்டு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மேலும் இதேபோன்ற ஒன்பது குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தது.
முஹமட் ஹஃபிட்ஸ் ஒப்புக் கொண்ட 17 குற்றச்சாட்டுகளில் அவர் 17 பேரை 83,000 வெள்ளி வரை ஏமாற்றியிருக்கிறார். இதில் ஒரு பகுதி தொகையைத் திருப்பிஅளித்துவிட்டதாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
2019ல் சிங்கப்பூரில் நடந்த 'யு2' கலைநிகழ்ச்சி மற்றும் அனைத்துலக சாம்பியன்ஸ் கிண்ணக் கண்காட்சி காற்பந்துப் போட்டிக்கு (ஐசிசி) நுழைவுச்சீட்டுகளை வாங்கித் தரு வதாகக் கூறி முஹமட் ஹஃபிட்ஸ் ஏமாற்றியிருந்தார்.