சிங்கப்பூர் விமானக் கண்காட்சி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும். இருப்பினும், பொதுமக்கள் வருகைக்கென இம்முறை நாட்கள் ஒதுக்கப்படாது என்றும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கண்காட்சி, சாங்கி கண்காட்சி மையத்தில் பிப்ரவரி 15ஆம் தேதியன்று தொடங்கும் என்று கூறப்பட்டது. முன்னதாக, பல நாடுகளைச் சேர்ந்த ஆகாயப் படைகளின் வான் சாகசங்களைப் பார்ப்பதற்காக வார இறுதியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். கொவிட்-19 தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 10,000க்கும் மேற்பட்டோர் வருகை அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.