செவித்திறனற்ற அல்லது குறைபாடுடைய கொவிட்-19 நோயாளிகள் இனி குறுந்தகவல் வாயிலாகவோ மின்னஞ்சல் வாயிலாகவோ சுகாதார அமைச்சுடன் தொடர்புகொள்ளலாம்.
தொற்றிலிருந்து குணமடையும் திட்டங்கள் குறித்து கொவிட்-19 நோயாளிகளை தொலைபேசி வழி அமைச்சு தொடர்புகொண்டபோது செவித்திறனற்றவர்கள் தொலைபேசியில் பேசுவது தங்களுக்குச் சரிவராது என்று கூறினர்.
அதனைத் தொடர்ந்து புதிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கேட்கும் திறனற்ற நோயாளிகள் தொலை மருத்துவருடன் காணொளி வழியாகவோ வாட்ஸ்அப் தகவல் வழியாகவோ தொடர்பு கொள்ள முடியும். தேைவப்பட்டால், சைகை மூலம் உரைபெயர்ப்போரின் உதவியை அவர்கள் நாடலாம்.
இது தொடர்பான மேல்விவரங்களை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ரஹவு மாஸம் டிசம்பர் 31ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.
"கொள்ளைநோயால் உருவான சவால்களை எதிர்கொள்வதில் கேட்கும் திறன் குறைந்த சமூகம் சிரமப்படுவதை அறிவேன். சில குறிப்பிட்ட சவால்கள் மீதான தங்
களது கருத்துகளையும் எண்ணங்
களையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
"இல்லத்திலிருந்தவாறே குண
மடையும் நோயாளிகளில் செவித்திறனற்ற அல்லது கேட்டறிவதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்காக கொவிட்-19 நிர்வாக நடைமுறைகளில் மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது.
"இதற்காக சுகாதார அமைச்சு, சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு மற்றும் சிங்கப்பூர் செவித்திறனற்றோர் சங்கம் ஆகியன பங்காளித்துவம் செய்துகொண்டுள்ளன," என்றார் திருவாட்டி ரஹயு.
சுகாதார அமைச்சுடன் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொண்டதும் அதற்கென பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிர்வாகி ஒருவர் தொடர்புகொள்வார்.
24 மணி நேரத் தொடர்புக்கு எந்த மாதிரி தெரிவு தேவைப்படும் என்று அவர் கேட்டறிவார். மேலும், அவசரகால உதவி நாட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தொடர்பு எண் குறுந்தகவல் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.