பதின்ம வயது இளையரும் அவரது காதலியும் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக மரண விசாரணை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ரஃபி ஷெர்மான் அப்துல்லா டான், 19, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவில்லை என்றும் கடந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி மூன்றாம் நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்திருந்த மோட்டார்சைக்கிளை ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 1ல் அவர் ஓட்டிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது மோட்டார்சைக்
கிளின் பின்னிருக்கையில் நூர் அயுன் அப்துல்லா, 17, என்னும் அவரது காதலி அமர்ந்திருந்தார்.
அன்றைய தினம் பிற்பகல் 3.40 மணியளவில் வலதுபக்கம் திரும்பியபோது ரஃபியின் மோட்டார்சைக் கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பைத் தாண்டி இரண்டு மரங்கள் மீது மோதியது.
மோட்டார்சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.
காயங்களுடன் மருத்துவ
மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மணி நேரத்தில் அயுனி உயிரிழந்தார்.
அப்துல்லா டான் மூன்று நாள்
களுக்குப் பிறகு மாண்டார். மோட்டார்சைக்கிளை ஓட்டுவதற்குப் போதுமான அனுபவத்தை அவர் பெற்றிருக்காதது கட்டுப்பாட்டை இழக்கக் காரணமாக இருக்கலாம் என்று ஆடம் நகோடா என்னும் மரண விசாரணை அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) தமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டார்.
சாலையில் வாகனங்களை ஓட்டத் தொடங்குவதற்கு முன்னர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டிய அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
விபத்து நிகழ்ந்தபோது ரஃபி எவ்வளவு வேகத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டினார் என்பதற்கு போக்குவரத்து போலிசாரிடம் போதுமான ஆதாரம் இல்லை.
மேலும், சம்பவப் பகுதியில் விபத்தை ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் அம்சங்களான எண்ெணய் சிதறல், மணல் மற்றும் கற்சிதைவு கள் போன்றவையும் காணப்படவில்லை என்று மரண விசாரணை அதிகாரி கூறினார்.
2018 டிசம்பரில் அப்துல்லா டான், திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்காக சீர்திருத்தப் பயிற்சி தண்டனை விதிக்கப்பட்டவர் என்ற விவரமும் தெரியவந்துள்ளது.