தாய்லாந்து, மலேசியா வழியாக லாவோஸிலிருந்து புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை இறக்குமதி செய்வதை சிங்கப்பூர் தொடங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரி சக்தியை சிங்கப்பூர் இறக்குமதி செய்வது இதுவே முதன்முறை.
நூறு மெகாவாட்ஸ் வரையிலான நீர் மின்சாரம் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்படும். லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நான்கு ஆசியான் நாடுகளை இணைக்கும் தற்போதுள்ள ஒருங்கிணைப்புத் திட்டத்தின் வழியாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி இறக்குமதி செய்யப்படவிருக்கிறது. எல்லைகளுக்கு இடையே எரிசக்தி வர்த்தகத்தின் சாத்தியம் பற்றி ஆராய்வதற்காக நான்கு நாடுகளுக்கு இடையே 2014ல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
நூறு மெகாவாட்ஸ் மின்சாரம் என்பது 2020ல் சிங்கப்பூரின் மின்சாரத் தேவையில் 1.5 விழுக்காடாகும். இதன் மூலம் ஆண்டுக்கு 144,000 நான்கறை வீவக வீடு களுக்கு மின்சாரம் விநியோகிக்க முடியும்.
கடந்த செப்டம்பரில் சிங்கப் பூரின் கெப்பல் எலக்ட்ரிக், லாவோ ஸின் அரசாங்க மின்சார விநி யோக நிறுவனமான 'எலக்ட்ரிசைட் டு லாவோஸ்' ஆகியவற்றுக்கு இடையே எல்லைகளுக்கு இடை யிலான இந்த எரிசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த இரண்டு நிறுவனங்களும் இரண்டு ஆண்டு எரிசக்தியை வாங்கும் ஒப்பந்தத் திலும் கையெத்திட்டுள்ளன.
சிங்கப்பூரில் எரிசக்தி இறக்கு மதி செய்வதற்கான தொழில் நுட்பங்களைச் சோதிக்கவும் ஒழுங்குமுறையை உருவாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 அக்டோபரில் கரிமக் குறைவான வளங்களிலிந்து 30 விழுக்காடு மின்சாரத்தை இறக்குமதி செய்யப்போவதாக சிங்கப்பூர் அறிவித்திருந்தது.