ஈஸ்ட் கோஸ்ட் கடலில் மூழ்கியவர் என நம்பப்படும் ஆடவரின் உடல் கண்டுபிடுப்பு

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடலில் மூழ்கியவர் என நம்பப்படும் ஆடவரின் உடல் நேற்று காலை (ஆகஸ்ட் 27) கண்டுபிடிக்கப்பட்டது.

920 ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கார் நிறுத்துமிடம் சி1 அருகே காலை 7 மணிக்கு உதவி கேட்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்துள்ளது.

இது ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அணைக்கரைக்கு அருகே உள்ள பார்க்லேன் கிரீன் பகுதி.

குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது அங்கு ஓர் உடல் நீரி மிதந்துகொண்டிருந்தது என்றும் அதிகாரிகள் அதை மீட்டு கரைக்குக்கொண்டு வந்தனர் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவ இடத்திலேயே ஆடவர் மரணம் அடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.

நீரில் மூழ்கி அந்த ஆடவர் மரணம் அடைந்துவிட்டதாக காவல் துறையினர் இந்த வழக்கை வகைப்படுத்தியுள்ளனர். இதில் சட்டத்துக்குப் புறம்பான, சந்தேகத்துக்குரிய நடவடிக்கை எதுவும் இடம்பெற்றதாக காவல் துறையினர் நம்பவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!