தங்கள் மனைவியரை மயக்கமுறச் செய்து, ஒருவர் மனைவியுடன் இன்னொருவர் பாலியல் உறவு வைத்துக்கொண்ட வழக்கில் தொடர்புடைய எழுவரில் நால்வருக்கு 13½ ஆண்டு முதல் 22 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் 50 வயதைத் தாண்டிய ஒருவரைத் தவிர மற்ற மூவருக்கும் 20 பிரம்படிகளும் கிடைக்கும்.
"நீதிமன்றத்திற்கு வந்த மிகவும் வியப்பான, கொடூரமான பாலியல் வழக்குகளில் இதுவும் ஒன்று," என்று நீதிபதி பாங் காங் சாவ் குறிப்பிட்டார்.
தங்கள் மனைவியரின் படங்களையும் காணொளிகளையும் அவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்ட மனைவியருள் ஒருவர் தான் அம்மாதிரி நிலையில் இருக்கும் படங்களைத் தன் கைப்பேசியில் கண்டதையடுத்து. இந்தக் குற்றச்செயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.