ஜோகூர் பாரு நெடுஞ்சாலையில் விபத்து: சிங்கப்பூரர் மரணம்

மலேசியாவில் உள்ள ஈஸ்ட்டர்ன் டிஸ்பர்சல் லிங்க் என்ற நெடுஞ்சாலையில் இருக்கும் மேம்பாலச்சாலையில் திங்கள்கிழமை காலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிங்கப்பூரர் மாண்டார்.

அவர், ஜோகூர் சோதனைச்சாவடியை நோக்கி வந்துகொண்டு இருந்தபோது அதிகாலை சுமார் 2 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்ததாக மலேசியாவின் சீன மொழி நாளிதழ் சைனா பிரஸ் தெரிவித்தது.

அவர் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்துகொண்டு இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளோட்டி, தன் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் மேம்பாலச்சாலையின் சுவரில் மோதி நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பதிவு பெற்ற அந்த மோட்டார்சைக்கிள், உடல் கிடந்த இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாலையில் சறுக்கி ஓடிப்போய்க் கிடந்தது என்றும் கூறப்பட்டது. அந்த வாகனம் வாடகை வாகனம் என்பதும் தெரியவந்தது.

மரணமடைந்தவர் முகம்மது டேனியல் அப்துல்லா என்று அவரின் உறவினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!