துவாஸ் கட்டுமானத்தள விபத்தில் ஊழியர் மரணம்

துவாஸ் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட வேலையிட விபத்தில் ஊழியர் ஒருவர் மாண்டார். அவர் வெளிநாட்டு ஊழியராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சனிக்கிழமை காலை 9 மணிவாக்கில் கட்டுமானத் தளத்தில் ஊழியர் ஒருவர் நினைவிழந்த நிலையில் காணப்பட்டதாகக் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. 

அதன் பின்னர் அந்த ஊழியருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. 

அதைத்தொடர்ந்து, ஊழியரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், அந்த ஊழியர் சனிக்கிழமை மாலை உயிரிழந்துவிட்டார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஊழியரின் குடும்பத்தினர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாகவும் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது. 

மாண்ட ஆடவர் பெண்டா ஓசன்- ஹியூண்டாய்-போஸ்கலிஸ் கூட்டு நிறுவனத்தின் ஊழியர் என்று தெரிவிக்கப்பட்டது. 

இவ்வாண்டில் மட்டும் இதுவரை 17 பேர் வேலையிட விபத்துகளில் மாண்டுவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!