ஜோகூர் விபத்து: சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சொகுசு கார்கள் சேதம்

தங்களின் ‘மெக்லேரன்’ சொகுசு கார்களை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு ஊர்வலமாக ஓட்டிச் செல்ல நினைத்த ஓட்டுநர்கள், ஞாயிற்றுக்கிழமையன்று விபத்தில் சிக்கினர். மூன்று வாகனங்கள் ஒன்றின்மேல் ஒன்று மோதியதில் ஒரு காருக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது.

ஜோகூரின் குளுவாங் பகுதியில் காலை 9 மணியளவில் விபத்து நேர்ந்ததாக உள்ளூர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதல் வாகனம் வலப்பக்கம் திரும்புவதற்காக வேகத்தைக் குறைத்ததை அடுத்து இரண்டாவது வாகனத்தை ஓட்டியவர் உடனே ‘பிரேக்’ போட்டார். ஆனால், மூன்றாவது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் இரண்டாவது கார் மீது மோதி அது பின்னர் முதல் காரை மோதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மூன்று கார்களையும் ஓட்டிச் சென்றவர்கள் காயமின்றித் தப்பினர். இதற்கிடையே, மோட்டார் வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காகவும் விபத்து நேரக் காரணமாக இருந்ததற்காகவும் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊர்வலத்தில் மொத்தம் ஆறு கார்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!