அறுவை சிகிச்சை அறையில் மானபங்கம்; சந்தேக நபர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு

அறுவை சிகிச்சை அறையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக நம்பப்பட்ட ஓர் ஆடவர் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று 43 வயது மிஜோஸ் பொலிகார்ப்போ அரானாய்டோ குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிலிப்பீன்சைச் சேர்ந்த அவர்மீது இதே குற்றச்சாட்டை இனி சுமத்த முடியாது.

காயம் விளைவிப்பது, மானபங்கம் போன்ற சில குற்றங்களுக்கு மட்டும் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய முடியும். அவ்வாறு செய்ய சந்தேக நபர், பாதிக்கப்பட்டவருடன் சமரசம் செய்துகொள்ளவேண்டும். பொதுவாகக் கட்டணம் செலுத்துவது அல்லது மன்னிப்புக் கேட்பதன் மூலம் அது சாத்தியமாகும்.

குற்றம் இடம்பெற்ற சூழல் போன்ற அம்சங்களைக் கருத்தில்கொண்டு பொது வழக்கறிஞர் சந்தேக நபரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பது குறித்து முடிவெடுப்பார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான திரு அரானாய்டோ, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பேரகன் கடைத்தொகுதியில் இருக்கும் ஒரு மருந்தகத்தில் காலை 9.45 மணிக்கும் 10.20 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டது. திரு அரானாய்டோ மருந்தகத்தில் இருந்ததற்கான காரணத்தை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!