உற்பத்தித்துறையில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்க கணக்காளர்களுக்குப் புதிய சான்றிதழ்கள்

உற்பத்தித்துறையில் நீடித்த நிலைத்தன்மையை ஊக்குவிக்க கணக்காளர்களுக்குப் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நீடித்த நிலைத்தன்மை தொடர்பாக நிறுவனங்களுக்கு உதவ கணக்காளர்களுக்குத் தகுந்த திறன்கள் இருப்பதை இது உறுதி செய்யும்.

நவம்பர் 29ஆம் தேதியன்று மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற மாநாட்டில் சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவித்த திட்டங்களில் இது அடங்கும்.

உலகளாவிய போக்கிற்கு ஏற்ப கணக்காளர் பணிகளை மேற்கொள்வது முக்கியம் என்று இரண்டாம் நிதி அமைச்சர் இந்திராணி ராஜா மாநாட்டில் தெரிவித்தார்.

“பசுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதுதொடர்பான பணிகளை மேற்கொள்ளத் தகுந்த ஆற்றலைக் கொண்ட கணக்காளர்களுக்கான தேவை அதிகரிக்கிறது,” என்று அமைச்சர் இந்திராணி தெரிவித்தார்.

மாநாட்டின்போது நிபுணத்துவக் கணக்காளர் நடுவம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 13 உள்ளூர், உலகளாவிய பங்காளித்துவ நிறுவனங்கள் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!