பள்ளியில் சக மாணவரை வெட்டிக் கொன்ற இளையருக்கு 16 ஆண்டுச் சிறைத்தண்டனை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2021ல் ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளியில் நடந்த பயங்கர கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வந்த, தற்போது 18 வயதாகும் இளையர், சக மாணவரை கோடரியால் வெட்டிக் கொன்றதை டிசம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டார். அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கொலைச் சம்பவம் நிகழ்ந்தபோது அவருக்கு வயது 16. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் 2021 மார்ச்சுக்கும் ஏப்ரலுக்கும் இடையே கோடரி உள்ளிட்ட பல ஆயுதங்களை வாங்கி அவர் பள்ளிக்குக் கொண்டு வந்தார்.

தன்னை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தோடு பள்ளியில் உள்ளவர்களை அவர் தாக்கத் திட்டமிட்டிருந்தார். அப்போது தன்னைக் காவல்துறை சுட்டுக் கொன்றுவிடும் எனவும் அவர் எதிர்பார்த்தார்.

2021 ஜூலை 14ஆம் தேதியன்று ஒரு கோடரியையும் ஒரு கத்தியையும் ஒரு பூப்பந்து விளையாட்டுப் பையில் மறைத்துவைத்து பள்ளிக்கு எடுத்து வந்த அவர் கழிவறையில் உள்ள கைகழுவும் தொட்டிக்குக் கீழே மறைத்துவைத்தார். ஆனால், அவரது திட்டம் அன்று நிறைவேறவில்லை.

2021 ஜூலை 19ஆம் தேதி அவர் மீண்டும் முயற்சி செய்தார். சுமார் 11.15 மணிக்கு கழிவறையில் கோடரியுடன் காத்திருந்த அவர், உள்ளே நுழைந்த முன்பின் அறிமுகமில்லாத 13 வயது மாணவரை சரமாரியாக வெட்டினார். இதில் அந்த மாணவர் உயிரிழந்தார்.

சிறுவர் மற்றும் இளவயதினர் சட்டத்தின்படி வயது காரணமாக தாக்கியவரின் பெயரை வெளியிட முடியாது.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் பெயரை வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், பெற்றோர் கேட்டுக்கொண்டதால், இறந்தவரான ஈத்தன் ஹுனின் பெயரை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

தாக்கியவர் மீது ஆரம்பத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. அது, பின்னர் நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் தம் மீதான குற்றச்சாட்டை டிசம்பர் 1ஆம் தேதி அன்று நடைபெற்ற விசாரணையில் தாக்கியவர் ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடைபெற்றதிலிருந்து குற்றம் புரிந்தவர் தடுப்புக் காவலில் இருந்து வருகிறார். சிறையிலேயே அவர் ‘ஓ’ நிலைத் தேர்வை எழுதினார். 2022ஆம் ஆண்டில் நடந்த ‘ஓ’ நிலைத் தேர்வில் அவர் பங்கேற்றார் என்று சிங்கப்பூர் சிறைத் துறை சேவை குறிப்பிட்டது.

இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டிலும் அந்த இளையருக்கு தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாகவும் மனநலக் கழகத்தில் அவரது மனநிலை மதிப்பிடப்பட்டதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பபட்டது.

ஈத்தனின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. ஆனால், வழக்கறிஞர் மெர்வின் சியோங் ஈத்தனின் சார்பில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கறிஞர் சியோங் வழியாக பெற்றோர் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் மனமுடைந்து போயுள்ளோம். ஈத்தனை தெரிந்தவர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறோம்,” என்று பெற்றோர் கூறியிருந்தனர்.

“ஈத்தனை எல்லாரும் அன்புடன் நினைவுகூர விரும்புகிறோம். அவருடைய நலனுக்காகவும் அவரது அன்பான இதயத்திற்காகவும் அமைதியை விரும்பும் தன்மைக்காகவும் அவரை நினைவில் கொள்ளுங்கள்,” என்று பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.

சம்பவத்திற்குப் பிறகு பள்ளிக்கு கூடுதல் ஆலோசகர்கள் வழங்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு மனநலம் தொடர்பான உரைகள் நடத்தப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!