தோழியைக் கீழே தள்ளிவிட்டதை ஒப்புக்கொண்ட ஆடவர்; பெண் மரணம்

குடிபோதையில் இருந்த தமது தோழி மீது கோபமடைந்து அவரைப் பிடித்து, முழு பலத்தையும் பயன்படுத்திக் கீழே தள்ளிவிட்டதை ஜேசன் ஓங் பி் சி ஒப்புக்கொண்டார்.

கீழே விழுந்த ஜோயி எனுப்படும் அந்தப் பெண்ணுக்கு உதவாமல் அவரை அங்கேயே விட்டுச் சென்றார் 33 வயது ஓங்.

வழிப்போக்கர்களின் உதவியால் ஜோயி வீடு திரும்பினார். ஆனால் அதே நாளன்று அவர் மரணமடைந்தார்.

மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டும் மூளையில் காயம் ஏற்பட்டும் ஜோயி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி பின்னிரவு நேரத்தில் மேகசின் சாலையில் உள்ள ஒரு மதுபானக்கூடத்துக்கு வெளியே ஜோயியை ஓங் கீழே தள்ளிவிட்டார்.

தமது நண்பர்களுடன் மதுபானம் அருந்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது ஓங்கை ஜோயி தற்செயலாகச் சந்தித்தார்.

டாக்சிக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த ஜோயி, ஓங் மீது சாய்ந்தார்.

பிறகு ஜோயி தரையில் உட்கார்ந்தார். அவரைத் தூக்கிவிட ஓங் முயன்றார். ஆனால் ஜோயி நகரவில்லை.

கோபமடைந்த ஓங், ஜோயியின் கைப்பேசியைப் பறித்து அருகில் இருந்த புல் மீது வீசினார்.

தமது கைப்பேசியை எடுத்துக்கொண்ட ஜோயி, தாம் வீட்டுக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார்.

அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஓங் முன்வந்தபோதும் ஜோயி மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த ஓங், தமது முழு பலத்தையும் பயன்படுத்தி கீழே தள்ளிவிட்டார்.

சுயநினைவின்றி இருந்த ஜோயிக்கு வழிப்போக்கர்கள் உதவி செய்தனர்.

நண்பர் ஒருவர் உதவியுடன் ஜோயி கிராப் தனியார் வாடகை கார் மூலம் வீடு சென்றடைந்தார்.

ஜோயியின் கணவர் அதிகாலை 3.30 மணி அளவில் வீடு திரும்பியபோது ஜோயி குறட்டை விட்டுக்கொண்டிருந்ததாகக் கூறினார்.

ஆனால் காலை 11 மணி அளவில் குறட்டை சத்தம் இருந்ததாக அவர் சொன்னார்.

மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஜோயியின் கணவர் வீடு திரும்பியபோது ஜோயி குறட்டை விடவில்லை என்பதை தாம் உணர்ந்ததாக அவர் கூறினார்.

ஜோயியின் கண்கள் திறந்திருந்ததாகவும் ஆனால் அவர் அசையவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜோயியின் கணவர் ஆம்பலன்ஸ் வாகனத்தை அழைத்தார்.

ஜோயி இறந்துவிட்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே, ஜோயி குறித்து நண்பர்களிடமிருந்து அழைப்பு கிடைத்ததும் மனவுளைச்சல் ஏற்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று ஓங் தாய்லாந்துக்குச் சென்றிருந்தார்.

அவர் அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியன்று சிங்கப்பூர் திரும்பினார்.

அதே நாளன்று அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தகவல்களை அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!