சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லப் போவதாக பொது வெளியில் துருக்கிய ஏர்லைன்ஸ் கூறியுள்ள போதிலும் அதற்கான விண்ணப்பம் எதையும் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதை புதன்கிழமையன்று தெரிவித்த சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், இதன் தொடர்பில் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனக்கு எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று செய்தியார்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தது.
“விமனாச் சேவை வழங்குமுன் அந்தச் சேவை நிறுவனங்கள் முறையான ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்,” என்று ஆணையத்தின் விமானப் போக்குவரத்து இயக்குநர் சிட்னி கோ விளக்கினார்.
துருக்கியின் ஆங்கில நாளிதழான ஹுரியட் என்ற ஊடகத்திடம் பேசிய துருக்கிய ஏர்லைன்ஸ் தலைவர், அஹ்மெட் போலாட், தமது விமானச் சேவை நிறுவனம் 2024ஆம் ஆண்டு மார்ச் 15க்கும் மார்ச் 25க்கும் நடுவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் நகர்களுக்கு சேவை வழங்க உள்ளதாகத் தெரிவித்தார்.
“ஆஸ்திரேலிய விமானப் பயணம் சிங்கப்பூரில் 10 மணிநேர இடைநிறுத்தத்திற்கு பின் மேலும் 7மணிநேரப் பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்,” என்று டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வெளிவந்த செய்தித் தகவல் கூறியது.
அத்துடன், அவர் தனது விமானச் சேவை நிறுவனம் இயக்கும் இதற்கான விளம்பரத்தில் ‘பார்பி’ ஆங்கிலப் படப் பகழ் ஹாலிவுட் நடிகை மார்கோட் ரோபி இடம்பெறுவார் என்றும் கூறினார்.
இந்நிலையில், இது குறித்த முறையான விண்ணப்பங்களை துருக்கிய ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் செய்யாததற்கு காரணம் என்ன என்று செய்தியாளர்கள் பலமுறை வினவியபோதும் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.