15 நிமிடத்தில் மூன்று பெண்கள் மானபங்கம்

லக்கி பிளாசா கடைத்தொகுதியில் குடிபோதையில் 15 நிமிட இடைவெளியில் மூன்று பெண்களை மானபங்கம் செய்த ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜோசப் மார்க் மெர்வின் எனப்படும் அந்த 48 வயது ஆடவர் 2023 ஆகஸ்ட் 6ஆம் தேதி அந்தக் கடைத்தொகுதியில் இருந்த பொழுதுபோக்குக் கூடத்தில் மது அருந்திய பின்னர் மாலை 6.50 மணியளவில் வெளியே வந்தார். படிக்கட்டு அருகே தோழியுடன் நின்றிருந்த 18 வயதுப் பெண்ணை அவர் மானபங்கம் செய்தார்.

ஐந்து நிமிடம் கழித்து, மாலை 6.55 மணியளவில் லக்கி பிளாசா வெளியே 44 வயதுப் பெண்ணை ஜோசப் மானபங்கம் செய்தார்.

பின்னர், இரவு 7.05 மணியளவில் சுரங்கப் பாதையில் 28 வயதுப் பெண்ணை அவர் மானபங்கம் செய்தார். குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு புதன்கிழமை (பிப்ரவரி 14) தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோசப் 1996ஆம் ஆண்டிலும் மானபங்கக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அதற்காக ஒன்பது மாத சிறை மற்றும் மூன்று பிரம்படிகளைத் தண்டனையாக அனுபவித்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!