‘ஏஐ’, பயணத்துறையால் நம்பிக்கையுடன் இருக்கும் உற்பத்தி, சேவை நிறுவனங்கள்

வரும் மாதங்களில் வர்த்தகச் சூழல் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அதிகமான உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாக வெவ்வேறு கருத்தாய்வுகளில் தெரியவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்களின் வளர்ச்சி, பயணத் துறை மீட்சி ஆகியவற்றின் காரணமாக உற்பத்தி, சேவை நிறுவனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக அந்தக் கருத்தாய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் வர்த்தக நிலவரம் குறித்துப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் கருத்தாய்வு நடத்தியது. அதில் இவ்வாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான வர்த்தக நிலவரம் தங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்றெண்ணும் நிறுவனங்களைவிட, சாதகமாக இருக்கும் எனக் கருதும் நிறுவனங்களின் விகிதம் 22 விழுக்காடு அதிகமாகும். இந்த விகிதம், இதன் தொடர்பில் கழகம் நடத்திய முந்தைய கருத்தாய்வில் பதிவான 10 விழுக்காட்டைவிட இது மிகவும் அதிகமாகும்.

அதேவேளை, சிங்கப்பூர் புள்ளி விவரத் துறை, சேவைத் துறை நிலவரம் குறித்து நடத்திய மற்றொரு கருத்தாய்வில் இந்த விகிதம் ஏழு விழுக்காடாகப் பதிவானது. முந்தைய கருத்தாய்வில் பதிவான விகிதம் ஐந்து விழுக்காடாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!