கட்டுமான நிறுவனமான ‘ஷின் யோங் கன்ஸ்ட்ரக்ஷனில்’ திட்ட மேலாளராகப் பணிபுரிந்த டோ யோங் சூன், சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு $1.8 மில்லியனுக்கும் மேலான தொகையை லஞ்சமாக கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
அந்தக் குற்றத்திற்காக 39 வயதான டோக்கும் மூன்று ஆண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை ( மே 3ஆம் தேதி) விதிக்கப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட 12 ஊழல் குற்றச்சாட்டுகளை டோ நீதிமன்றத்தில் ஒப்புகொண்டார். தண்டனை விதிக்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற 47 குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.
இக்குற்றத்தை 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் டோ புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
டோ, வேறு சில நிறுவனங்களுடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தின் ஒப்பந்தங்களைப் பெற அத்தோட்டத்தின் இயக்குநராக இருந்த 57 வயது, பேரி சோங் பங் வீக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுக்கக் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
பேரி சோங் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.